பூதையனார் கோயில்
gallery

.

பூதையனார் கோயில் கீழையூரின் வடகிழக்கே அமைந்துள்ளது.இக்கோயிலில் சித்திரை பவுர்ணமியிலும் மற்றும் முக்கிய நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. இத்தலம் செப்பனிடப்பட்டு 9-7-1984ஆம் ஆண்டு சிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. மேலும் இக்கோயிலில் கீழையூர் சின்னி காளிங்கராயர் தெருவை சார்ந்த பல ஆண்டுகளுக்கு முன் அருகில் உள்ள குலமங்கலத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்ற வீனாடி காளிங்கராயர் வகையறாவைச் சார்ந்த திரு.கு.வாசு காளிங்கராயர் 16-3-1972ல் இரண்டு குதிரைகள் கட்டி கொடுத்துள்ளார்.மலேசியாவில் வாழும் ரெத்தினவேல் காளிங்கராயர் 21-4-1986ல் கிணறு ஒன்று கட்டி கொடுத்துள்ளார்.மேலும் நிரம்ப பொருட்செலவில் இலண்டன் திரு.M.கிருஷ்ணமூர்த்தியும், திரு.ஜே.கலியராஜும் மடப்பள்ளி ஒன்றை கட்டி கொடுத்துள்ளனர். மேலும் பலர் திருப்பணி செய்துள்ளனர். இக்கோயிலில் குயவர் பூஜைகளை செய்து வருகின்றார்.