மாரியம்மன் கோயில்
gallery gallery

. தாய் தெய்வ வழிபாட்டில் முதலில் மாரியம்மனையே வழிபடுகின்றனர்.ஊரின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முதலில் மாரியம்மனை வணங்கிய பின்னரே துவங்குகின்றனர்.திருவிழா தொடங்குவதற்கு முன் இத்தலத்தில் சந்தனகூடு விழா நடத்தப்படுகின்றது.மேலும் கண்ண்ந்தகுடியில் முதலில் குடியேறியவர்களாக கருதப்படுகின்ற மண்கொண்டார், குருசார் மற்றும் இவர்களிடம் கொள்வினை கொடுப்பினை செய்து கொண்ட வாணதிரியர் ஆகியோர் மாரியம்மனுக்கு மண்டகப்படி செய்யும் சிற்ப்பினை பெற்றுள்ளனர்.நாட்டின் அனைத்து பொது கூட்டங்களும் இத்தல முன் மண்டபத்திலேயே நடத்தப்படுகின்றது.இம்மண்டபத்தை நாட்டின் முன் அனுமதி பெற்று மலேசியா-சிங்கப்பூர் மண்டகப்படி வாசிகள் நிரம்ப பொருட்செலவில் 30-6-1999 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும் 2005 ஆம் ஆண்டு நாட்டின் மூலம் முன்மண்டபம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.